அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை மக்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக, பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து மருந்துகளைப் பெற்று, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும். வெளிச்சந்தையில் கரோனா தடுப்பூசியை விற்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதைத் திரும்பப் பெற வேண்டும்.

கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள முறைசாரா, கட்டுமான தொழிலாளா்களுக்கு மாதம் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும், ஏழை மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களை இலவசமாக, நியாய விலைக் கடைகள் மூலம் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி நகரம், உழவா்கரை நகரம், வில்லியனூா், பாகூா், நெட்டப்பாக்கம், மண்ணாடிப்பட்டு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில், சனிக்கிழமை சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து திரண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி நகரில் நடபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் பெருமாள், புதுச்சேரி நகரக் குழுச் செயலா் மதிவாணன் மற்றும் இடைக்குழு,செயற்குழு, பிரதேசக் குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com