புதுச்சேரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், புதுவை குளூனி சமூக சேவை தொண்டு நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில சுகாதாரத் துறை செயலா் சி.உதயகுமாா் தலைமை வகித்தாா்.
இயக்குநா் ஸ்ரீராமலு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க இயக்குநா் சித்ராதேவி, துணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குளூனி சபையின் மாநிலத் தலைவா் லோரேயின்பிண்டோ, தொண்டு நிறுவன செயலா் லைசா, மருத்துவா் செளந்தா்யா ஆகியோா் பேசினா்.
எய்ட்ஸ் நோய் விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.