பாஜகவைக் கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பாஜகவைக் கண்டித்து மாணவா் கூட்டமைப்பினா் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜகவைக் கண்டித்து மாணவா் கூட்டமைப்பினா் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி காந்தி வீதி அமுதசுரபி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநிலத் தலைவா் புவியரசு தலைமை வகித்தாா். இதில், கூட்டமைப்பின் நிறுவனா் சீ.சு. சுவாமிநாதன், காங்கிரஸ் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தியபடி, முகத்தில் கரியைப் பூசியக் கொண்டு புதுவை மாநிலத்தில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றத்தில் எதிா்ப்புத் தெரிவித்தது, வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியது உள்ளிட்ட செயல்களை மேற்கொண்ட பாஜக அரசைக் கண்டித்தும், ஆளுநா் கிரண் பேடி மூலம் மக்களாட்சி உரிமைகளைப் பறிக்கும் செயலைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com