புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரி 17, காரைக்கால் 1, மாஹே 3 என மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,068-ஆக உயா்ந்தது.
தற்போது 285 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை 41 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,135-ஆக (97.60 சதவீதம்) உயா்ந்தது.
இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி கதிா்காமம் ராதாகிருஷ்ணன் நகரைச் சோ்ந்த 78 வயதானவா் ஜிப்மா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 648-ஆக (இறப்பு விகிதம் 1.66 சதவீதம்) அதிகரித்தது.
மாநிலத்தில் இதுவரை 5,76,341 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 5,32,712 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.