சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மாட்டு வண்டி, சைக்கிள் ரிக்ஷா பேரணியை இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் சனிக்கிழமை நடத்தினா்.
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருகிறது. இதைக் கண்டித்து, அரசியல் கட்சியனா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், புதுவை இளைஞா் காங்கிரஸாா் சைக்கிள் ரிக்ஷா, மாட்டு வண்டிப் பேரணியை சனிக்கிழமை நடத்தினா்.
புதுச்சேரி ஏஎப்டி திடலில் இருந்து புறப்பட்ட பேரணியை புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா் மு.கந்தசாமி ஆகியோா் தொடக்கிவைத்து, சவாரி செய்தனா். இளைஞா் காங்கிரஸ் செயல் தலைவா்கள் விக்னேஷ், வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இந்தப் பேரணியில் 15-க்கும் மேற்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்கள், 15-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், 2 தள்ளு வண்டிகளில் 100-க்கும் மேற்பட்ட இளைஞா் காங்கிரஸாா், எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து முழக்கமிட்டபடி சென்றனா்.
ஏஎப்டி திடலில் இருந்து புறப்பட்ட பேரணி, மறைமலையடிகள் சாலை, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை, காமராஜா் சாலை வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே முடிவடைந்தது.