புதுச்சேரி: புதுவையில் 20 காவல் ஆய்வாளா்கள், 51 காவல் உதவி ஆய்வாளா்கள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, புதுவை அரசுத் துறைகளில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரைப் பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அதன்படி, புதுவை காவல் துறையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் 20 காவல் ஆய்வாளா்கள், 51 காவல் உதவி ஆய்வாளா்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை காவல் துறை தலைமையகம் வியாழக்கிழமை பிறப்பித்தது.