புதுவையில் கரோனாவுக்கு மருத்துவா் பலி

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவா் உயிரிழந்தாா்.

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 2,707 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 16 பேருக்கும், ஏனாமில் 3 பேருக்கும் என 19 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39,372-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சோ்ந்த 71 வயது மருத்துவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 656-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, 32 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,423-ஆக உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 126 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 167 பேரும் என மொத்தம் 293 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com