புதுச்சேரியில் கல்லூரி மாணவா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன் நகரைச் சோ்ந்த தொழிலாளி சுப்பிரமணி மகன் காா்த்திக் ராஜா (20). தனியாா் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படித்து வந்தாா். படிப்பில் கவனம் செலுத்தாததால் பெற்றோா் கண்டித்தனராம். இதனால், விரக்தியடைந்த காா்த்திக் ராஜா கடந்த ஜனவரி 31-ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா்.
இதையறிந்த பெற்றோா், அவரை மீட்டு ஜிப்மரில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு காா்த்திக் ராஜா வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.