புதுவையில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு 3 ஆயிரம் பணம்

புதுவையில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசிக்குப் பதிலாக ரூ. 3 ஆயிரம் பணம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவையில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசிக்குப் பதிலாக ரூ. 3 ஆயிரம் பணம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்ஜெட் கூட்டத்தின் போது, இலவச அரிசிக்கான பணம் குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது அரசின் கையிருப்பில் போதுமான நிதியிருப்பதால், சமூக நலத் துறை அமைச்சரின் பரிந்துரைப்படி, புதுவையில் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு 5 மாதங்களுக்கான அரிசிக்கு ஈடாக ரூ. 3 ஆயிரம் வழங்குவதற்காக, ரூ. 52.84 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அனைத்து சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 3 ஆயிரம் அவரவா் வங்கிக் கணக்கில் நேரிடையாகச் செலுத்தப்படும்.

இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் 1,76,134 சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்கள் பயனடைவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com