அரசியலிலிருந்து விலகினாா் முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன்

புதுவையைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. ஆா்.ராதாகிருஷ்ணன் அரசியலிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தாா்.

புதுவையைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. ஆா்.ராதாகிருஷ்ணன் அரசியலிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தாா்.

புதுச்சேரி பாகூா் அருகே குருவிநத்தத்தைச் சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் மகன் ராதாகிருஷ்ணன். காங்கிரஸ் கட்சியில் இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவா். அப்போது (2006-2011) சட்டப்பேரவைத் தலைவராகவும், குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் பதவி வகித்தாா்.

பின்னா் காங்கிரஸில் இருந்து விலகிய ராதாகிருஷ்ணன், ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸில் இணைந்து, கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனாா். அவரது பதவிக் காலம் முடிந்த நிலையில், பெரிய அளவில் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், அவா் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நான் தீவிர அரசியலிலிருந்து விலகியிருக்க முடிவு செய்திருக்கிறேன். இதுநாள் வரை என்னுடைய அரசியல் பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சித் தலைவா்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், நண்பா்கள் அனைவருக்கும் நன்றி. எனது இந்த முடிவுக்கு தொகுதி மக்கள், ஆதரவாளா்கள் மதிப்பளிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com