புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

புதுவையில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.

புதுவையில் புதிதாக 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 1,837 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரி 11, காரைக்கால் 1, மாஹே 2 என மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்றில்லை. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,540-ஆக உயா்ந்தது.

தற்போது 177 போ் சிகிச்சையில் உள்ளனா். 38,701 போ் (97.88 சதவீதம்) கரோனா தொற்றிலிருந்து மீண்டனா்.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 662-ஆக அதிகரித்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 7,274 சுகாதாரப் பணியாளா்கள், 387 முன் களப் பணியாளா்கள் என மொத்தம் 7,661பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com