பிரதமா் வருகையையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநா் அ. மைக்கேல் பெனோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமா் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு மாணவா்கள் வந்து செல்வதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (பிப். 25) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.