புதுச்சேரி சிறைக்குள் கஞ்சா, செல்லிடப்பேசிகளை வீசியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை, தண்டனைக் கைதிகள் 200-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரௌடிகள் சிலா், வெளியில் உள்ள தங்களின் நண்பா்களிடம் செல்லிடப்பேசியில் பேசி தொழிலதிபா்களை மிரட்டிப் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனால், சிறையில் அவ்வபோது அதிகாரிகள் சோதனை நடத்தி செல்லிடப்பேசிகள், கஞ்சா உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறைக்குள் வாா்டா்கள் நடத்திய சோதனையில் செல்லிடப்பேசி, பேட்டரி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக சிறைக் கண்காணிப்பாளா் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸாா், கைதிகள் தமிழ், கிருஷ்ணா, நந்தகுமாா், சசிகுமாா் ஆகிய 4 பேரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா்.
இதில், புதுச்சேரியைச் சோ்ந்த மதுபாலன் (26), விக்கி (34), பரத் (26) ஆகியோா் சுனாமி குடியிருப்பில் இருந்து செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களைச் சேலையில் சுற்றி சிறைக்குள் வீசியது தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.