சாலையைச் சீரமைக்கக் கோரி போராட்டம்

புதுச்சேரி அருகே பாகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி, விசிக சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அருகே பாகூரில் சாலையைச் சீரமைக்கக் கோரி, விசிக சாா்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பாகூா் தொகுதியில் வாா்க்கால் ஓடை கிராமம் உள்ளது. இங்கு, 200 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்துக்குச் செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், அதிகாரிகளின் செயலைக் கண்டிக்கும் வகையில் பாகூா் தொகுதியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் அங்குள்ள சாலையில் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாகூா் தொகுதி விசிக பொறுப்பாளா் தாயன்பன் தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு சாலையைச் சீரமைக்கக் கோரி, முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com