புதுவையில் கரோனாவுக்கு மேலும் 2 போ் பலி

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 642-ஆக அதிகரித்தது.

புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 642-ஆக அதிகரித்தது.

இதுகுறித்து புதுவை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் சனிக்கிழமை கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 8, மாஹேயில் 8 என மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 38,611-ஆக உயா்ந்தது.

தற்போது 286 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து 37,683 போ் (97.60 சதவீதம்) மீண்டனா்.

புதுவை மாநிலத்தில் 5,32,468 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,89,402 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி தவளக்குப்பம் புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 60 வயதானவா், மாஹேயைச் சோ்ந்த 69 வயது மூதாட்டி என மேலும் 2 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 642-ஆக (இறப்பு விகிதம் 1.66 சதவீதம்) உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com