புதுவை மாநில காங்கிரஸ் அவசர செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது.
அண்மையில் தில்லி சென்ற முதல்வா் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்பி ஆகியோா் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினா். அப்போது, புதுவை அரசியல் நிலவரம், சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
தொடா்ந்து, 5 மாநில தோ்தல்கள் தொடா்பாக காங்கிரஸ் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் முதல்வா் நாராயணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிலையில், புதுவை மாநில காங்கிரஸ் அவசர செயற்குழுக் கூட்டம், புதுச்சேரியிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல்வா் நாராயணசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.