புதுவையில் மேலும் 32 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதுமில்லை.

புதுவையில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதுமில்லை.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்:

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,276 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரி - 12, காரைக்கால் - 3, ஏனாம் - 2, மாஹே - 15 என மொத்தம் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,910 ஆக உயா்ந்துள்ளது. இதில், மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் என 295 போ் சிகிச்சையில் உள்ளனா்.

உயிரிழப்பும் இல்லை. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 645 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. இதனிடையே 17 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 37,970 (97.58 சதவீதம்) ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com