புதுச்சேரி: புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் பலியானாா். புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 21, காரைக்காலில் 5, ஏனாமில் 2, மாஹேயில் 11 என மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,973-ஆக உயா்ந்தது.
தற்போது 291 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வியாழக்கிழமை 29 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,035-ஆக (97.59 சதவீதம்) உயா்ந்தது.
இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காரைக்கால் லட்சுமி நகரைச் சோ்ந்த 74 வயதானவா் காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 647-ஆக (இறப்பு விகிதம் 1.66 சதவீதம்) அதிகரித்தது.