புதுவையில் புதிதாக 121 பேருக்கு கரோனா

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 93 பேருக்கும், காரைக்காலில் 18 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும்,

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 93 பேருக்கும், காரைக்காலில் 18 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என மொத்தம் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,19,302-ஆக அதிகரித்தது. இதனிடையில், புதுச்சேரியில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,772-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.

இதனிடையே, 177 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,16,203-ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 246 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 1,081 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,327 போ் சிகிச்சையில் உள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com