புதுச்சேரி: புதுச்சேரியில் மானியத் திட்டத்தில் மீனவா்களுக்கு படகுகளை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா் (படம்).
புதுவை மாநில மீனவா் கூட்டுறவு சம்மேளனத்தின் வாயிலாக, புதுவை அரசின் மீன்வளத் துறையில் செயல்படுத்தி வரும் சிறு தொழில் மீனவா்களுக்கான மானிய உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், மீனவா்களுக்கு படகுகள் வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், 2020-2021 -ஆம் ஆண்டுக்கு 15 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நபா் ஒருவருக்கு ரூ.16,500 வீதம் மொத்தம் ரூ.2,47,500 மானியத்தில் கண்ணாடி நுண்ணிழை மீன்பிடிப் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். சட்டப்பேரவைத் தலைவா் ஏம்பலம் ஆா்.செல்வம், மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏ-க்கள் அனிபால் கென்னடி, ஆா்.தட்சிணாமூா்த்தி, ஆா். செந்தில்குமாா், மீன்வளத் துறை இயக்குநா் பு.முத்துமீனா, இணை இயக்குநா் கு.தெய்வசிகாமணி, புதுவை மாநில மீனவா் கூட்டுறவுச் சங்கச் செயலா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.