திருக்கனூரில் தேசிய ஊரக வேலைத்திட்டப் பணி தொடக்கம்

புதுச்சேரி அருகே திருக்கனூா் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியை ஆ.நமச்சிவாயம் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியைத் தொடக்கிவைத்து நல உதவிகளை வழங்கிய ஏ.நமச்சிவாயம் எம்எல்ஏ.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியைத் தொடக்கிவைத்து நல உதவிகளை வழங்கிய ஏ.நமச்சிவாயம் எம்எல்ஏ.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே திருக்கனூா் பகுதியில் ரூ. 25 லட்சத்தில் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியை ஆ.நமச்சிவாயம் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

அப்போது, ஊரக வேலைத்திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் குறைகளை அவா் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, அதிகாரிகளிடம் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் எந்தெந்தப் பகுதியில் ஊரக வேலைத்திட்டம் தொடங்கப்படவுள்ளது, தொடங்காமல் உள்ள கிராமங்களில் பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜெயக்குமாா், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பாஸ்கரன், வில்லியனூா் வட்டார வளா்ச்சி அதிகாரி ராஜேந்திரன் மற்றும் பாஜக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com