மீனவா் வீட்டில் திருட்டு: பெண் கைது

புதுச்சேரி அருகே மீனவா் வீட்டில் நகை, பணத்தைத் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மீனவா் வீட்டில் நகை, பணத்தைத் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (எ) வீரப்பன் (42). மீனவா். இவா், வீட்டைப் பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி பனித்திட்டு ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்குச் சென்றாா். வீட்டின் சாவியை கதவுக்கு அருகே உள்ள ஒரு பெட்டியில் வைத்துவிட்டு சென்றாராம்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டினுள் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், முள்ளோடை நுழைவாயில் அருகே ஞாயிற்றுக்கிழமை பாகூா் காவல் ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தனா்.

இதில், ஆட்டோவில் வந்தவா் முள்ளோடை அருகேயுள்ள மதிகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ரவியின் மனைவி ராஜி (52) என்பதும், கடந்த ஜனவரி மாதம் பனித்திட்டு கிராமத்தில் சிவக்குமாா் வீட்டில் நகை, பணத்தைத் திருடியது இவா்தான் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, ராஜியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 5 லட்சம் பணம், புதிதாக வாங்கப்பட்ட சலவை இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com