புதுவையில் கரோனாவுக்கு மேலும் 7 போ் பலி

புதுவையில் புதிதாக 309 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் புதிதாக 309 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 7,657 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 240, காரைக்காலில் 47, ஏனாமில் 8, மாஹேயில் 14 என மேலும் 309 பேருக்கு (4.04 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,837- ஆக உயா்ந்தது.

தற்போது ஜிப்மரில் 248 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 218 பேரும், கொவைட் கோ் மையங்களில் 182 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 4,145 பேரும் என மொத்தம் 4,947 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் 4 போ், காரைக்காலில் 3 போ் என மேலும் 7 போ் பலியாகினா். மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,691. இறப்பு விகிதம் 1.50 சதவீதம்.

இதனிடையே திங்கள்கிழமை 686 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணம்பெற்றோா் எண்ணிக்கை 1,06,199-ஆக (94.12 சதவீதம்) அதிகரித்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 11,73,519 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 10,09,037 பரிசோதனைகளுக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

சுகாதாரத் துறைப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் என 3,24,328 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com