புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் உழவா்கரை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் சாமுவேலின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அங்காளன் மனு ஏற்கப்பட்டது.
புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி உழவா்கரை தொகுதியில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிடுவதாக அறிவித்து, புதுச்சேரியைச் சோ்ந்த சாமுவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், அவா் வெள்ளிக்கிழமை தனது வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.
இதனிடையே, சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கவில்லை என்று கூறி, சாமுவேலின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அங்காளன் என்பவா் மனு ஏற்கப்பட்டது. இதனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு மாற்றாக, அங்காளன் களமிறங்குகிறாா்.