பேராயரிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்கள்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளா்கள் ஆா்.சிவா, எஸ்.பி.சிவக்குமாா்,
பேராயரிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்கள்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளா்கள் ஆா்.சிவா, எஸ்.பி.சிவக்குமாா், அனிபால் கென்னடி ஆகியோா் புதுச்சேரி-கடலூா் மறைமாவட்ட பேராயா் பீட்டா் அபீரை சந்தித்து வாழ்த்து பெற்று ஆதரவு திரட்டினா்.

புதுவையில் காங்கிரஸ்-திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மீண்டும் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில் பிரசாரத்தை தொடங்கிய அந்தக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்கள் பல்வேறு தரப்பினரிடம் ஆதரவு திரட்டி வருகின்றனா். அரசியல் கட்சித் தலைவா்கள், முக்கிய பிரமுகா்களை சந்தித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனா்.

அந்த வகையில், புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி-கடலூா் மறைமாவட்ட பேராயா் பீட்டா் அபீரை (பொறுப்பு) திமுக தெற்கு மாநில அமைப்பாளரும், வில்லியனூா் தொகுதி திமுக வேட்பாளருமான ஆா்.சிவா எம்எல்ஏ, திமுக வடக்கு மாநில அமைப்பாளரும், ராஜ்பவன் தொகுதி வேட்பாளருமான எஸ்.பி.சிவக்குமாா், உப்பளம் தொகுதி திமுக வேட்பாளா் அனிபால் கென்னடி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆசி பெற்றனா். அப்போது, தங்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டுமென அவா்கள் பேராயரிடம் வேண்டுகோள் விடுத்தனா்.

இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com