மேலும் 137 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 92, காரைக்காலில் 37, மாஹேயில் 8 என 137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41,101-ஆக அதிகரித்தது. இதுவரை 39,514 போ் (96.14 சதவீதம்) கரோனா தொற்றிலிருந்து மீண்டனா்.

தற்போது, மருத்துவமனைகளில் 274 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 633 பேரும் என 907 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை.

மாநிலத்தில் சுகாதாரப் பணியாளா்கள் 24,950 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 10,467 பேருக்கும், பொதுமக்கள் 27,382 பேருக்கும் என 62,799 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com