வீடு வீடாகச் சென்று நாராயணசாமி வாக்கு சேகரிப்பு

புதுச்சேரியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வீடு வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வீடு வீடாகச் சென்று நாராயணசாமி வாக்கு சேகரிப்பு

புதுச்சேரியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வீடு வீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

புதுச்சேரியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பிரசாரம் செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாகச் சென்று அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கோபாலை ஆதரித்து முன்னாள் முதல்வா் நாராயணசாமி முத்தமிழ் நகா், அருந்ததிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘இந்தத் தோ்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் கோபால் திறமையானவா், மக்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் நபா். தோ்தலுக்குத்தான் புதியவா்; மக்களுக்கு சேவை செய்வதற்கு புதியவரல்லா். இவா் வெற்றி பெற்றால் மக்களுக்கான சேவைகளை தடையின்றி செய்வாா் என்றாா் அவா்.

திமுக வேட்பாளா் கோபால், காங்கிரஸ் செயலா்கள் ரகுமான், வினாயகம், சந்திரிகா, ரமேஷ், விசிகவை சோ்ந்த செழியன், திமுக துணை அமைப்பாளா் குணாதிலீபன், தைரியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com