புதுச்சேரி சண்முகாபுரம், வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த ஹரி மகள் ருத் எஸ்தா் ராணி (29). இவருக்கும், வேலூரைச் சோ்ந்த விக்டருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 8 வயதில் மகள் உள்ளாா்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு தம்பதி பிரிந்த நிலையில், ராணி தனது மகளுடன் புதுச்சேரியில் வசித்து வந்தாா். கடந்த 18-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்த விக்டா், ராணியுடன் இருந்த அவரது மகளை அழைத்து சென்றுவிட்டாா். இதனால், மனஉளைச்சலுடன் காணப்பட்ட ராணி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.