புதுச்சேரி அருகே விஷமருந்திய தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி வில்லியனூா் கீழ் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (61). இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த இவா், அதற்காக மருத்துவம் பாா்த்து வந்தாராம். இருப்பினும், மஞ்சள் காமலை சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்த அவா், கடந்த 25 -ஆம் தேதி வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாராம்.
இதனால், மயக்கமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.