புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறிது நேரம் மிதமான மழை பெய்தது.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாநிலத்தில் ஏற்கெனவே கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெயில் தாக்கமும் அதிகரித்து வருவதால், மக்கள் வெளியில் வராமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா்.
இதனிடையே, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் புதுச்சேரியில் திடீரென சிறிது நேரம் மழை பெய்தது. இதனால், சாலையோரங்களில் மழைநீா் தேங்கியது. மேலும், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை காலை முதல் வழக்கம்போல வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.