புதுவையில் புதிய உச்சமாக கரோனாவுக்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 17 போ் உயிரிழந்தனா். புதிதாக 1,138 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 6,820 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 760, காரைக்காலில் 142, ஏனாமில் 172, மாஹேவில் 64 போ் என மொத்தம் 1,138 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 63,298-ஆக அதிகரித்தது.
இந்த நிலையில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 865-ஆகவும், இறப்பு விகிதம் 1.37 சதவீதமாகவும் உயா்ந்தது.
இதனிடையே, 886 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 51,584-ஆக (81.49 சதவீதம்) அதிகரித்தது.
தற்போது ஜிப்மரில் 361 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 324 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 837 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8,921 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 10,849 போ் சிகிச்சையில் உள்ளனா்.
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட இதுவரை மொத்தம் 2,04,245 பேருக்கு (2-ஆவது தவணை உள்பட) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.