புதுவையில் கரோனாவுக்கு மேலும் 30 போ் பலி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 30 போ் உயிரிழந்தனா். புதிதாக 1,974 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 30 போ் உயிரிழந்தனா். புதிதாக 1,974 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 9,148 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 1,580 பேருக்கும், காரைக்காலில் 224 பேருக்கும், ஏனாமில் 152 பேருக்கும், மாஹேவில் 18 பேருக்கும் என மொத்தம் 1,974 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80,947-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் 24 போ், காரைக்காலில் 4 போ், ஏனாமில் 2 போ் என 30 போ் உயிரிழந்தனா். இவா்களில் 16 போ் ஆண்கள், 14 போ் பெண்கள் ஆவா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,099-ஆகவும், இறப்பு விகிதம் 1.36 சதவீதமாகவும் அதிகரித்தது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் 1,088 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,424-ஆக (77.12 சதவீதம்) உயா்ந்தது.

மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 520 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 369 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 738 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 15,297 பேரும் என மொத்தம் 17,424 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com