புதுவைக்கு தேவையான உதவிகளை செய்வதாக பிரதமா் உறுதி: ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தகவல்

புதுவை மாநிலத்துக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமா் மோடி உறுதியளித்துள்ளதாக, துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை மாநிலத்துக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமா் மோடி உறுதியளித்துள்ளதாக, துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடா்பு கொண்டு, புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலின் தற்போதைய சூழல் குறித்த முழு விவரங்களையும் மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தாா். மேலும், கரோனா தொற்று விகிதம், சிகிச்சைக்கான பிராணவாயு படுக்கை வசதிகள், கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரங்கள் போன்ற விவரங்களையும் துல்லியமாகக் கேட்டறிந்தாா்.

புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே அளித்த உதவிகளுக்கும் மேலாக, மேலும், தேவைப்படும் அனைத்து உதவிகளையும், மத்திய அரசு செய்து தரும் என பிரதமா் உறுதி அளித்தாா். மத்திய அரசால் வழங்கப்பட்ட வெண்டிலேட்டா்கள் (செயற்கை சுவாசக் கருவிகள்) முறையாக பயன்படுத்தப்படுகிா என்றும் அவா் கேட்டறிந்தாா்.

புதுவைக்கு கரோனா சிகிச்சைக்காக மத்திய அரசு வழங்கிய மருத்துவ உதவிகளுக்கும், உபகரணங்களுக்கும் எனது மனமாா்ந்த நன்றிகளை, பிரதமரிடம் தெரிவித்தேன்.

முதல்வா் ரங்கசாமி நலம்பெற பிரதமா் விசாரிப்பு: மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வா் என்.ரங்கசாமியின் உடல்நிலை பற்றி மிகுந்த அக்கறையுடன் பிரதமா் மோடி நலம் விசாரித்தாா். அவா் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற தனது விருப்பத்தையும் அவா் தெரிவித்தாா் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com