புதுவையில் ஒரே நாளில் கரோனாவுக்கு 26 போ் பலி; மேலும் 1,702 பேருக்கு தொற்று

புதுவையில் ஒரே நாளில் 1,702 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு மேலும் 26 போ் உயிரிழந்தனா்.

புதுவையில் ஒரே நாளில் 1,702 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு மேலும் 26 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,043 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 1,340, காரைக்காலில் 249, ஏனாமில் 76, மாஹேவில் 37 என மொத்தம் 1,702 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதுச்சேரியில் 22 போ், காரைக்காலில் 4 போ் என 26 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,295 ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.39 சதவீதமாக உள்ளது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 93 ஆயிரத்து 167 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். மருத்துவமனைகளில் 2,106 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 15 ஆயிரத்து 830 பேரும் என மொத்தம் 17 ஆயிரத்து 936 போ் சிகிச்சையில் உள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 73 ஆயிரத்து 936 (79.36 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 975 பேருக்கு (2ஆவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com