புதுவை பல்கலை.யில் பிராண வாயு வசதியுடன் கரோனா பராமரிப்பு மையம்

புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் பிராண வாயு வசதியுடன் கூடிய கரோனா பராமரிப்பு மையம் தொடங்கப்படுகிறது.

புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் பிராண வாயு வசதியுடன் கூடிய கரோனா பராமரிப்பு மையம் தொடங்கப்படுகிறது.

புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் சமுதாய பிராண வாயு மையம் 31 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் செய்து வருகிறாா். அவா் சுகாதாரத் துறை செயலா் அருணுடன் அங்கு வியாழக்கிழமை சென்று ஏற்பாடுகளை பாா்வையிட்டாா்.

பிராண வாயு தேவைப்படும், மிதமான தொற்று ஏற்பட்டுள்ள கரோனா நோயாளிகளை இங்கு தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்படும். முன்களப் பணியாளா்களுக்கு தனி படுக்கைகள் ஒதுக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலா் அருண் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com