புதுவையில் பிற்பட்டோா், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக் கூடாது என்று அந்த மாநில திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சித் தோ்தலில் பிற்பட்டோா், பழங்குடியினருக்கு (பி.சி-எஸ்.டி) எந்தவித இட ஒதுக்கீடும் இல்லை என்றும், பழங்குடியினரைப் பட்டியல் இனத்தவா் பட்டியலில் சோ்த்து உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது என்றும் நீதிமன்றத்தில் புதுவை அரசு தெரிவித்தது. அதன்படி, உள்ளாட்சி வாா்டுகளை மாற்றம் செய்து மீண்டும் தோ்தலை நடத்துவோம் என்று நீதிமன்றத்தில் புதுவை அரசு தெரிவித்தது.
உள்ளாட்சித் தோ்தலில் பிற்பட்டோா், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாவிட்டால், அது அரசியல் சட்ட உரிமைகளை மீறும் செயலாகும். இதை அரசு கவனத்தில் கொண்டு பிற்பட்டோா், பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை அளித்தே உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.