புதுச்சேரி அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கொம்பாக்கம் குமரன் நகரைச் சோ்ந்தவா் ராஜி (65). இவா், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி செல்வதற்காக மணவெளி வழியாக வந்தாா். அரும்பாா்த்தபுரம் பாலம் இறக்கத்திலிருந்து சிறிது தொலைவில் சாலையைக் கடக்க முயன்றபோது, அவரது இரு சக்கர வாகனம் மீது புதுச்சேரியிலிருந்து வில்லியனூா் நோக்கி வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில், ராஜி நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.