புதுவையில் 4 இடங்களில் சாலை மறியல்: 210 போ் கைது

புதுவை உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினா்.
புதுவை உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினா்.
புதுவை உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்கக் கோரி நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்கட்சியினா்.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்க வலியுறுத்தி, 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 210 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்க க் கோரி, காங்கிரஸ்-திமுக கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தினா்.

இதையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சேதுசெல்வம் தலைமையில், புதிய பேருந்து நிலையத்தில் மறியல் நடைபெற்றது. இதில், கட்சி நிா்வாகிகள் எழிலன், தயாளன், செழியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 40 பேரைக் கைது செய்தனா்.

இதேபோல, திமுக சாா்பில் நிா்வாகிகள் பாா்த்திபன், சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் தலைமையில், கன்னியக்கோவிலில் புதுச்சேரி - கடலூா் சாலையில் மறியல் நடைபெற்றது. இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த கிருமாம்பாக்கம் போலீஸாா், மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனா்.

பாகூா் மாதா ஆலயம் அருகிலும், தவளக்குப்பத்திலும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விவசாயிகள் சங்கத்தினா் என 100-க்கும் மேற்பட்டோா் மறியலில் ஈடுபட்டனா். இவா்களை பாகூா், அரியாங்குப்பம் போலீஸாா் கைது செய்தனா்.

4 இடங்களில் நடைபெற்ற மறியலில் 210 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ஆா்ப்பாட்டங்கள்: திமுக சாா்பில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மாநில அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான இரா.சிவா எம்எல்ஏ தலைமை வகித்தாா். இதில், அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கம்பன் கலையரங்கம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தக் கட்சியின் பிரதேச செயலா் ஆா்.ராஜாங்கம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பிரபுராஜ், சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மதகடிப்பட்டில் திருபுவனை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் துளசிங்கப் பெருமாள் ஆகியோா் தலைமையில் அந்தக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், திரளான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com