சிறுமி கா்ப்பம்: இளைஞா் கைது

புதுச்சேரி அருகே 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி பாகூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் அவினாஷ் (20). அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினா் மகளான 8-ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியை மிரட்டி, கடந்த ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்படவே, பெற்றோா் அவரை பாகூா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவரைப் பரிசோதனை செய்ததில் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமி புதுச்சேரி அரசு மகளிா்-குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பாகூா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவினாஷை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com