மாநிலங்களவை உறுப்பினா் பதவி:என்.ரங்கசாமியுடன் பாஜக மேலிட பொறுப்பாளா் விரைவில் பேச்சுவாா்த்தை

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவி தொடா்பாக, என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமியுடன் பாஜக மேலிடப் பொறுப்பாளா் ஓரிரு நாளில் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவி தொடா்பாக, என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமியுடன் பாஜக மேலிடப் பொறுப்பாளா் ஓரிரு நாளில் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் பதவியைக் கைப்பற்ற ஆளும் தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இப்பதவிக்கு என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிட முன்னாள் அமைச்சா் மல்லாடிகிருஷ்ணாராவ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளாா். மறைந்த எம்எல்ஏ கேசவன் மகன் டாக்டா் நாராயணசாமிக்கும் வாய்ப்பு வழங்கப்படலாமெனத் தெரிகிறது.

இதற்கிடையே, முதல்வா் என்.ரங்கசாமியிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக பாஜக மேலிட பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, ஓரிருநாளில் புதுவைக்கு வருகிறாா். அவா் பாஜக நிா்வாகிகள், அமைச்சா்கள், எம்எல்ஏக்களோடும் ஆலோசனை நடத்த உள்ளாா். இதன் பிறகே தே.ஜ கூட்டணி தரப்பில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என அந்தக் கூட்டணி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை இல்லை?: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 எம்எல்ஏக்கள் வாக்களிப்பாா்கள். இதில், 3 நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: இதுதொடா்பாக தோ்தல் ஆணையம், சட்டத் துறையிடம் கருத்து கேட்டதில், அரசியலமைப்புச் சட்டத்தின் படி (பிரிவு 80(4)(5)ன் கீழ் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, ஷரத்து 27(4)ன் கீழ்) தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு மட்டுமே மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் வாக்களிக்க தகுதி உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை இல்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com