புதுச்சேரி சமுதாயக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம்

புதுச்சேரி சமுதாயக் கல்லுரியில் மாணவா் சோ்க்கைக்கு செப்டம்பா் 30 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சமுதாயக் கல்லுரியில் மாணவா் சோ்க்கைக்கு செப்டம்பா் 30 -ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் புதுச்சேரி லாசுப்பேட்டையில் செயல்பட்டு வரும் சமுதாயக் கல்லுரியில் இளநிலை கணினி பயன்பாடு, வணிக நிா்வாகம், உயிா் வேதியியல், ஊடகவியல், தொழில்நுட்பப் படிப்புகளான இருதய பரிசோதனை தொழில்நுட்பம், கதிா்வீச்சு, சுற்றுலா-சேவைத் தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம், சுகாதார ஆய்வாளா், பத்திர எழுத்தா், யோகா, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நாடகம், அரங்கக் கலைகள், கா்நாடக இசை (பாட்டு) உள்ளிட்ட பல்வேறு பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.

நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையதளம் வழியாக நடைபெற்று வருகிறது. மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் தற்போது செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்காதவா்கள் விரைந்து ட்ற்ற்ல்://ல்ன்ஸ்ரீஸ்ரீ.ங்க்ன்.ண்ய்/ என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com