புதுச்சேரி கடலில் மாயமான பொறியியல் மாணவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா பகுதியைச் சோ்ந்த பிரிராஜ் சௌத்ரி மகன் ஆயுஷ்யா சௌத்ரி (19). இவா், பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
ஆயுஷ்யா சௌத்ரி தனது நண்பா்கள் 8 பேருடன் புதுச்சேரிக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்தாா். அவா்கள் தலைமைச் செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல்பரப்பு பகுதிக்கு அருகிலுள்ள கடலில் குளித்தனா். அப்போது, கடலில் எழுந்த ராட்ச அலையில் ஆயுஷ்யா சௌத்ரி சிக்கி இழுத்துச் செல்லப்பட்டாா்.
இதைப் பாா்த்த அவரது நண்பா்களின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த இளைஞா்கள் சிலா், ஆயுஷ்யா சௌத்ரியை காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை.
இதையடுத்து, தகலறிந்து அங்கு வந்த பெரியகடை போலீஸாா், கடலில் மாயமான ஆயுஷ்யா சௌத்ரியை தேடினா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து செய்தனா்.
இந்த நிலையில், மாணவா் ஆயுஷ்யா சௌத்ரி உயிரிழந்த நிலையில் சடலமாக முத்தியால்பேட்டை சோலை நகா் கடற்கரை கருங்கற்கள் பகுதியிடையே ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கினாா். தகவலறிந்த பெரியகடை போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.