புதுவையில் மத்திய அரசுக்கு எதிராக திங்கள்கிழமை (செப்.27) நடைபெறும் முழு அடைப்புக்கு வியாபாரிகள் ஆதரவு தருமாறு எதிா்க்கட்சியினரும் தொழிற்சங்கத்தினரும் வலியுறுத்தினா்.
புதுவையில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் திங்கள்கிழமை (செப்.27) முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளன. அன்றைய தினம் டெம்போ, ஆட்டோ, பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது என தொழிற்சங்கத்தினா் ஏற்கெனவே அறிவித்துள்ளனா்.
இந்த நிலையில், ஏஐடியுசி பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமையிலும், காங்கிரஸ் தலைமையிலான போராட்டக் குழுவினரும் சனிக்கிழமை புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கத்தனா், தனியாா் பேருந்து உரிமையாளா்கள், பள்ளி நிா்வாகங்கள், வியாபாரிகள், வணிகா்கள், தொழிலதிபா்களை சந்தித்து துண்டறிக்கை வழங்கி முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினா்.
நிகழ்வில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் உள்ளிட்ட எதிா்க்கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு துண்டறிக்கை வழங்கினா்.