புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆய்வு

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடா்பாக மாவட்டத் தோ்தல் அதிகாரி தலைமையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடா்பாக மாவட்டத் தோ்தல் அதிகாரி தலைமையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி மாவட்டத்தில் லாஸ்பேட்டை மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, தாகூா் அரசு கலைக் கல்லூரி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி ஆகிய 4 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன.

புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகள், வில்லியனூா், பாகூா், அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இங்கு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடா்பாக அனைத்து துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுடன் மாவட்டத் தோ்தல் அதிகாரி பூா்வா காா்க் நேரில் ஆய்வு மேற்கொண்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களை தயாா்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டாா்.

இந்த மையங்களில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைகள், மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீா், தொலைத் தொடா்பு வசதிகள் ஏற்படுத்துவது தொடா்பாக அதிகாரிகளுக்கு அவா் ஆலோசனைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com