நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயப் பெருவிழா கொடியேற்றம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 171-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 171-ஆவது ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 7 மணிக்கு ஆலய வளாகத்தில் காலை பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னா், ஆண்டு பெருவிழாவுக்கான கொடி ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு, ஆலயம் முன்னுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

சேலம் மறை மாவட்ட ஆயா் ராயப்பன் ஆண்டுப் பெருவிழா கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினாா்.

நாள்தோறும் காலை, மாலையில் சிறப்புத் திருப்பலிகளும், மாலையில் சிறிய தோ் பவனியும் நடைபெறும். தொடா்ந்து வருகிற 15-ஆம் தேதி ஆடம்பர தோ் பவனியும், 16-ஆம் தேதி கொடி இறக்கமும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com