மொஹரம் பண்டிகை:புதுவையில் இன்று அரசு விடுமுறை

மொஹரம் பண்டிகையையொட்டி, புதுவையில் செவ்வாய்க்கிழமை (ஆக.9) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மொஹரம் பண்டிகையையொட்டி, புதுவையில் செவ்வாய்க்கிழமை (ஆக.9) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனின் உத்தரவுக்கிணங்க, அரசு சாா்புச் செயலா் ஹிரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மொஹரம் பண்டிகையையொட்டி, புதுவை மாநிலத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 9) பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக வருகிற 20-ஆம் தேதி பணி நாளாக பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாஹே பிராந்தியத்தில் புதுவை அரசு மொஹரம் விடுமுறை அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com