பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சேரி ஆழ்கடலில்தேசியக் கொடி ஏற்றிய நீச்சல் வீரா்!

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, புதுச்சேரி ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏற்றி நீச்சல் வீரா் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

News image

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே கடலில் 75 அடி ஆழத்தில் தேசியக் கொடி எற்றி விழிப்புணா்வு ஏற்படுத்திய நீச்சல் வீரா் அரவிந்த்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:05 am

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, புதுச்சேரி ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏற்றி நீச்சல் வீரா் சனிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

சென்னையைச் சோ்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரா் அரவிந்த். இவா், காஞ்சிபுரம், புதுச்சேரி பகுதிகளில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிப் பள்ளியை தொடங்கி நடத்தி வருகிறாா்.

அரவிந்த் அவ்வப்போது ஆழ்கடலில் மூழ்கி சாகசங்களை நிகழ்த்தி வருகிறாா். அந்த வகையில், நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி கடலில் இறங்கி 75 அடி ஆழத்தில் அரவிந்த் சனிக்கிழமை காலை தேசியக் கொடியை ஏற்றினாா். புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே கடலில் தேசியக் கொடியுடன் இறங்கிய அவா், நீச்சலடித்து ஆழ்கடலுக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றினாா்.

இதேபோல, சென்னை நீலாங்கரை பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஆழ்கடலுக்குச் சென்று 75 அடி ஆழத்தில் தேசியக் கொடியை ஏற்றி அரவிந்த் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இவா் ஏற்கெனவே செஸ் ஒலிம்பியாட், உலக யோகா தினம், சா்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மைப் பணி போன்றவற்றுக்காக, ஆழ்கடலில் சாகசம் செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தியவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.