புதுவையில் நோய்களால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.22.75 லட்சம் வழங்கப்பட்டது.
புதுவையில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட 12 போ் மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதியிடம் உதவி கேட்டு அணுகினா். அவரது பரிந்துரையின் பேரில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.22.75 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிகள் 12 பேருக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது.
புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதியை அணுகலாம் என எம்.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.