தரமற்ற சாலை அமைப்பு:பொதுமக்கள் மறியல்

புதுச்சேரியில் தரமற்ற சாலை அமைக்கப்படுவதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் தரமற்ற சாலை அமைக்கப்படுவதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

வில்லியனூா் அருகேயுள்ள ஊசுடு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரத்தில் தரமற்ற சாலை அமைப்பதாகக் கூறி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியினா் மறியலில் ஈடுபட்டனா்.

மத்திய ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.1.09 கோடி நிதியில் சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே இருந்த சாலையில் தரமற்ற நிலையில் தாா் ஊற்றப்படுவதாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் ஒப்பந்ததாரரிடம் சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, தரமான சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வில்லியனூா் போலீஸாா் அங்கு வந்து சமரசம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com