இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தரமான உயா்தர சிகிச்சை அளிக்கப்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தரமான உயா்தர சிகிச்சை அளிக்கப்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையின் பின்வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. சேதுசெல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் போது மழை பெய்த நிலையில், குடை பிடித்தபடி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். மருத்துவமனையில் உயிா்காக்கும் மருந்துகள் வழங்கும் வகையில் கூடுதல் நிதியை அளிக்க வேண்டும். மருத்துவா், செவிலியா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த கீதநாதன், துரைச்செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com